01

E   |   සි   |  

 திகதி: 2017-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1148/2017: காலி, மொஹிதீன்வத்த வீடமைப்புத் திட்டம் : விபரம்

1148/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) காலி, கடவத் சத்தற பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள மொஹிதீன்வத்த வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாது;

(ii) அந்த வீடுகளில் தற்போது குடியிருப்பவர்களாக இனங்காணப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் முகவரிகளும் யாவை;

(iii) மேற்படி வீடுகளின் ஆரம்ப உரிமையாளர்களின் பெயர்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி வீடமைப்புத் திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு யாது;

(ii) காணி சுவீகரிக்கப்பட்ட வேளையில் காணி உரிமையாளர்/ உரிமையாளர்கள் என்றவகையில் இனங்காணப்பட்டிருந்த ஆளின்/ ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;

(iii) மேற்படி காணியை அரசாங்கம் சுவீகரித்ததாக குறிப்பிட்டுள்ள வர்த்தமானப் பத்திரிகையின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா;

(iv) காணி சுவீகரித்தலுக்காக அப்போது இழப்பீடு வழங்கப்பட்டதா;

(v) ஆமெனில், அந்த இழப்பீட்டுத் தொகை யாது;

(vi) இழப்பீட்டினை பெற்ற ஆட்களின் பெயர்கள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-09

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-03-09

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks