04

E   |   සි   |  

 திகதி: 2017-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1096/2017: சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குத் துணைபுரிந்த பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள்: ஒழுக்காற்று நடவடிக்கை

1096/ '16

கௌரவ அசோக பிரியந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நடைபெற்ற க.பொ.த (உயா்தர) பரீட்சைக்கு இம்மாவட்டத்திற்கு புறம்பான வெளிமாவட்ட மாணவர்கள் தோற்றிய பல சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;

(ii) இந்நிலைமையின் காரணமாக குறைந்த வசதிகளின் கீழ் க.பொ.த (உயா்தர) பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்க்கும் புத்தளம் மாவட்ட மாணவர்களுக்கு பலத்த அநீதி ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) வெளி மாவட்ட மாணவர்களின் கருத்திட்ட அறிக்கைகளை போலியான முறையில் அங்கீகரித்து புத்தளம் மாவட்டத்திலிருந்து மேற்படி பரீட்சைக்கு தோற்றுவதற்கு துணைபுரிந்த பாடசாலை அதிபர்களின் பெயர் மற்றும் இவர்கள் கடமையாற்றும் பாடசாலைகள் யாவை என்பதையும்;

(ii) இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை செய்த மற்றும் இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபுரிந்த பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு எதிராக ஏதேனும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-21

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-02-21

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks