01

E   |   සි   |  

 திகதி: 2016-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1027/2016: அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள வாய்மூலப் பரீட்சை: குறித்த கால அட்டவணை

1027/'16

​கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2007.07.01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்த உத்தியோகத்தர்கள் க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிங்கள மொழியை ஒரு பாடமாக சித்தியடைதல் வேண்டுமென்பதையும்;

(ii) அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நெறிப்படுத்தப்படுகின்ற வாய்மூலப் பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டுமென்பதையும்;

(iii) இப் பரீட்சை குறிப்பிட்டதொரு கால அட்டவணைக்கிணங்க நடத்தப்படுவதில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இப் பரீட்சையை கால அட்டவணையொன்றுக்கிணங்க நடத்த நடவடிக்கை எடுப்பாரா;

(ii) இன்றேல், வட மாகாண சபைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ இந்த பொறுப்பினை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-12-06

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks