01

E   |   සි   |  

 திகதி: 2016-12-02   பதிலளிக்கப்பட்டவைகள் 

1023/2016: சிறுநீரக நோயாளர் உதவி நிகழ்ச்சித்திட்டம் : கம்பஹா மாவட்டம்

1023/'16

கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) தற்போது பலத்த சமூகப் பிரச்சினையாகவுள்ள சிறுநீரக நோயினால் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்காகச் செயற்படுத்தப்படும் சிறு நீரக நோயாளர் உதவி நிகழ்ச்சித்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் செயற்படுத்தப்படுகின்றதா;

(ii) ஆமெனில், அதற்காக இவ்வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு;

(iii) இதுவரை நட்டஈடு வழங்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) எதிர்வரும் காலத்தில் நட்டஈடு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் இதுவரை அமுலாக்கப்படாவிடின், எதிர்வரும் காலத்தில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;

(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;

(iii) இந்நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக அப்பிரதேச பொதுமக்கள் அறியாதுள்ளதால், சமூக சேவைகள் திணைக்களத்தினால் பரந்த பிரசாரத்தை மேற்கொண்டு மக்களை மேலும் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுப்பாரா;

(iv) ஆமெனில், அது எவ்வாறு;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-02

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-24

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks