பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
319/ '15
கெளரவ ஜயந்த சமரவீர,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015.11.15 திகதியன்று உள்ளவாறு இலங்கையினுள் அரசுக்குச் சொந்தமான காணிகளின் அளவு யாதென்பதையும்;
(ii) மேற்படி காணிகளில் குத்தகைக்கு வழங்கியுள்ள காணிகளின் அளவு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அரசுக்குச் சொந்தமான ஒவ்வொரு காணியின் பெயர் மற்றும் அளவு, பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவட்ட வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;
(ii) குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு காணியின் பெயர், அளவு மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காலம், வருடாந்த குத்தகைகத் தொகை மற்றும் காணி அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவட்டம் தனித்தனியாக யாதென்பதையும்;
அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
(இ) (i) இன்றளவில் அரசுக்குச் சொந்தமான காணிகளை விற்பதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) விற்பதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள காணிகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி காணிகள் விற்கப்படும் அல்லது குத்தகைக்கு வழங்கப்படும் நபர்கள் யாவர் என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-24
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks