04

E   |   සි   |  

 திகதி: 2016-01-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0283/2016: "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் வேலைத்திட்டம் : விபரம்

283/'15

கௌரவ எஸ்.எம். மரிக்கார் ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஒவ்வொரு தேசிய பாடசாலைக்கும் ஒரே சமனான அனுகூலங்கள் வழங்கப்படுகின்றனவா;

(ii) இன்றேல், அனுகூலங்கள் வழங்கப்படும் முறையியலொன்று உள்ளதா;

(iii) ஆமெனில், அம்முறையியல் யாது;

என்பதை அவர் அறிவிப்பாரா?

(ஆ) (i) 2007 ஆம் ஆண்டில் அப்போதைய கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கொட்டிகாவத்தை ராஜசிங்ஹ வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாது;

(ii) மேற்படி பாடசாலையில் நிலவும் 13 ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு எடுக்கும் ​ காலம் எவ்வளவு;

(iii) மேற்படி பாடசாலையின் பழுதடைந்துள்ள கட்டடங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

(iv) ஆமெனில், அத்திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் வேலைத்திட்டம் எவ்வளவு காலத்தில் ஆரம்பிக்கப்படும்;

(ii) இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் ஒரே அளவான எண்ணிக்கையில் பாடசாலைகள் தெரிவு செய்யப்படுமா;

(iii) ஆமெனில், இப்பாடசாலைகளின் எண்ணிக்கை யாது ;

(iv) இந் நடைமுறை ஒவ்வொரு பிரதேசத்திலும் சமாந்தரமாக ஆரம்பிக்கப்படுமா;

(v) முன்னுரிமை வழங்கப்படும் பிரதேசங்கள் உள்ளனவா;

(vi) ஆமெனில், இப்பிரதேசங்கள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-28

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-28

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks