E   |   සි   |  

 திகதி: 2015-12-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0196/2015: வட மாகாண சபையில் இணைக்கப்பட்ட கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள்: இடமாற்றம்

196/ '15

கௌரவ விஜித ஹேரத்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஒருங்கிணைந்திருந்த வட - கிழக்கு மாகாண சபை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளாகப் பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களான 270 உத்தியோகத்தர்கள் வட மாகாண சபைக்கு இணைக்கப்பட்டனர் என்பதையும்;

(ii) சுமார் ஏழு வருட காலமாக மேற்கூறப்பட்டவாறு வதிவிடப் பிரதேசத்திற்கு வெளியில் பணியாற்றுவதன் மூலம் மேற்படி உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;

(iii) மேற்படி உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களில் முயற்சியெடுத்துள்ள போதிலும் அது பயனளிக்கவில்லையென்பதையும்;

(iv) ஒருசில உத்தியோகத்தர்கள் மட்டும் அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்று இடமாற்றங்களைப் பெற்றுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) கிழக்கு மாகாண குடியிருப்பாளர்கள் அம் மாகாண சபையில் பணியாற்றுவதற்காக மேற்கொள்ளும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-03

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-26

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks