பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
93/ '15
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது தமது வசிப்பிடத்திற்கான உரிமையை நிரூபிக்கின்ற உறுதி இன்மையின் காரணமாக மாத்திரம் நேர்முகப் பரீட்சைக்குக்கூட அழைக்கப்படாத சந்தர்ப்பங்கள் உள்ளதென்பதையும்;
(ii) கடந்த அரசாங்க காலத்தில் உறுதிகள் இன்மையின் காரணத்தினால் மாத்திரம் பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படாத பிள்ளைகள் சம்பந்தமாக தனியானதொரு மேன்முறையீட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது வசிப்பிடத்தை நிரூபிப்பதற்காக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட காணியின் உறுதியை சமர்ப்பிக்க வேண்டுமெனும் சட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(ii) உறுதி இன்மையின் காரணத்தினால் மாத்திரம் இற்றை வரை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படாத பிள்ளைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) உரிமை உள்ளதா இல்லையா என்பதை கவனத்திற்கொள்ளாது குடியிருப்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதனை தகைமையாகக் கருதி நியாயமான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-21
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-21
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks