04

E   |   සි   |  

 திகதி: 2015-11-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0092/2015: படையினரின் பிள்ளைகளுக்காக ஒதுக்கிய பாடசாலைகள் : விபரம்

92/ '15

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) படை உறுப்பினர்களது பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட பாடசாலைகள் தனியாகப் பேணிவரப் படுகின்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்?

(ஆ) இராணுவத்தின் தியாகிகளான, உத்தியோகத்தர்கள் மற்றும் படைவீரர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுத்தல் அவசியமாயிருந்த போதிலும் இவர்களின் பிள்ளைகளுக்கு தனியான பாடசாலைகள் காணப்படுவதன் மூலம் சமூகத்தில் புதிய சமூக வகுப்பொன்றின் அடிப்படையில் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்?

(இ) (i) மேற்படி பாடசாலைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மற்றும் படைவீரா்களின் பிள்ளைகளின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;

(ii) இத்தகைய பாடசாலைகளை கல்வித் திணைக்களத்தின் கீழ் கொண்டுவந்து ஏனைய மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு பேணிவருவதையிட்டு பாிசீலிக்காமைக்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-04

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-26

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks