01

E   |   සි   |  

 திகதி: 2015-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0079/2015: மின்சார வேலிக் கருத்திட்டம் : விபரம்

79/ '15

 

கௌரவ சந்திம கமகே,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த ஐந்து ஆண்டுகள் தொடக்கம் யானை-மனித மோதல் தீவரமடைந்துள்ளதுடன் இதனால் மனித உயிர்களும் யானை வளமும் அழிவடைந்து வருகின்றதென்பதையும்;

(ii) முறைசாரா விதத்திலும் திட்டமிடப்படாத வகையிலும் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக காட்டு யானைகளிடமிருந்து கிராமங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அநீதியான முறையில் தமது காணிகள் மற்றும் வீடுகளை இழப்பதன் மூலம் கிராமங்களில் வாழும் மக்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள மின்சார வேலி கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்கள் தனித்தனியே யாவை என்பதையும்;

(iii) இன்றளவில் செயலிழந்துள்ள மின்சார வேலிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) மேற்படி (அ)(ii) இல் குறிப்பிடப்பட்ட சம்பவங்களை எதிர்நோக்கிய மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இவ்வாறான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும் உரிய முறையியலொன்று அமைச்சில் நிறுவப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-21

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-21

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks