01

E   |   සි   |  

 திகதி: 2015-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0030/2015: 2014இல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள்: விபரம்

30/ '15

 

கௌரவ புத்திக பத்திறண,— விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2014 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி பணத்தொகையின் பெறுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி பணத்தொகை செலவிடப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iv) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நாட்டிற்கு கிடைத்த நன்மைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) புத்தாக்குநர்களை ஊக்குவிப்பதற்காக அப்போதிருந்த தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மேற்கொண்ட பணிகள் யாவையென்பதையும்;

(ii) 2014 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புத்தாக்கங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி புத்தாக்கங்களை சமர்ப்பித்தவர்கள் யாவரென்பதையும்;

(iv) இவர்களுக்கு வழங்கப்பட்ட அனுசரணைகள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படும் பணத்தொகை யாதென்பதையும்;

(iii) அப்பணத்தொகையை செலவிடுவதற்காகவுள்ள திட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-21

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks