E   |   සි   |  

 திகதி: 2015-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0014/2015: வாழ்வின் எழுச்சி நிதியம் : முறைகேடான பயன்பாடு

14/ '15

 

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) 2015 சனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு முன்னாள் விடயப்பொறுப்பு அமைச்சரின் ஆலோசனையின் பேரில் வாழ்வின் எழுச்சி நிதியத்தைப் பயன்படுத்தி ரூபா 20,132,277/- இற்கு (20.1 மில்லியன்) GI குழாய்கள் (கொடிக் கம்பங்கள்) கொள்வனவு செய்யப்பட்டுள்ளதை அவர் அறிவாரா?

(ஆ) (i) வாழ்வின் எழுச்சி நிதியத்தின் நோக்கங்களுக்கு அமைய பிரதேச சபைகளால் GI குழாய்களைக் கொள்வனவு செய்து விநியோகிப்பதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது வாழ்வின் எழுச்சி சட்டத்தின் எப்பிரிவின் கீழ் என்பதையும்;

(iii) அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அதிகாரி யார் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இவ்வாறு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை காரணமாக இழக்கப்பட்டுள்ள ரூபா 20 மில்லியன் தொகையை அறவிடுவதற்காக தற்போதைய அமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) இது தொடர்பாக நிதிசார் குற்றப் புலனாய்வொன்று மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி புலனாய்வின் முன்னேற்றம் யாது என்பதையும்;

(iv) இது தொடர்பில் நிருவாக ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-23

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-23

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks