04

E   |   සි   |  

 திகதி: 2010-06-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

0138/2010: " Nagenahira Navodaya" Programme

0138/ ’10

கெளரவ உதித் லொக்குபண்டார,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  “கிழக்கின் உதயம்” வேலைத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நீர்த்தேக்கங் களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன என்பதை அவா் அறிவாரா?

(ஆ)    (i)      அவ்வாறு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீன் குஞ்சுகளின் பண ரீதியிலான பெறுமதி யாது என்பதையும்,

(ii) குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீனினங்கள் யாவையென்பதையும்,

(iii) இதிலிருந்து வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன்வளம் எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) “வடக்கின் வசந்தம்” வேலைத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 97 நீர்த்தேக்கங் களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன என்பதை அவர் அறிவாரா?

(ஈ) (i) அவ்வாறு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீன் குஞ்சுகளின் பண ரீதியிலான பெறுமதி யாது என்பதையும்,

(ii) குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீனினங்கள் யாவையென்பதையும்,

(iii) இதிலிருந்து வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன்வளம் எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-06-30

கேட்டவர்

கௌரவ கெளரவ உதித் லொக்குபண்டார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks