01

E   |   සි   |  

 திகதி: 2010-07-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0131/2010: " Api Wawamu - Rata Nagamu" Programme

0131/ ’10

 

கெளரவ ரொசான் ரணசிங்க,—  கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  நாட்டில் இதுவரை தரிசாகக் காணப்பட்ட வயல்களில் “நாம் பயிர் செய்வோம் - நாட்டைக் கட்டியெழுப்புவோம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2008 - 2010 காலத்தினுள் மீண்டும் பயிரிடப்பட்ட வயல்களின் அளவு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்குச் சமர்ப்பிப்பாரா?

(ஆ) (i) அவ்வாறு பயிரிடப்பட்டமையினால் 2008 - 2010 காலத்தினுள் ஒவ்வொரு போகத்தின் போதும் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லின் அளவு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக எவ்வளவென்பதையும்,

(ii) அவ்வாறு தரிசாகக் காணப்பட்ட வயல்களில் பயிரிடப்பட்டதால் கிடைத்த விளைச்சல் காரணமாக தேசிய பொருளாதாரத்திற்கு அளிக்கப்பட்ட பங்களிப்பு யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-01

கேட்டவர்

கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks