04

E   |   සි   |  

 திகதி: 2010-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0090/2010: Tax on Mobile Phones

0090/ ’10               

5.

கெளரவ அஜித் குமார,—  சுற்றாடல் அமைச்சரைக்  கேட்பதற்கு,—  (1)

(அ)    (i)     கையடக்க தொலைபேசிகளுக்காக சூழல் பாதுகாப்பு வரி விதிக்கப் பட்டுள்ளதா என்பதையும்,

           (ii)    அவ்வாறெனின், எப்போதிருந்து இந்த வரி அறவீடு ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்,

(iii) 2010 ஆம் ஆண்டில் இவ் வரியின் மூலம் எவ்வளவு தொகை அறவிட எதிர்பார்க்கப்படுகின்றது என்பதையும்,

(iv) அவ்வாறு வரி அறவிடப்பட்டிருப்பின் எவ்வளவு தொகை பொதுத் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும்,

(v) வரிப் பணத்தில் எவ்வளவு தொகை கையடக்க தொலைப்பேசியினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்திவிட்டு நீக்கப்படுகின்ற பட்டரிகளில் எவ்வளவு எண்ணிக்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் 2009 ஆம் ஆண்டில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-09

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks