04

E   |   සි   |  

 திகதி: 2013-12-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

4159/2013: மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு: அதிகரித்தல்

4159/ ’13

கௌரவ துனேஷ் கங்கந்த,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      2013ஆம் ஆண்டில் மஹபொல புலமைப் பரிசில் நிதியத்திலிருந்து  பயன்பெறும் பல்கலைக்கழக மாணவ மாணவியரின் எண்ணிக்கை யாதென்பதையும்;

           (ii)      தற்போது பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப் பரிசில் தவணைப் பணத்தின் பெறுமதி எவ்வளவு என்பதையும்;

(iii) ஆறு ஆண்டுகளுக்கும் அதிக காலமாக அதிகரிக்கப்படாதுள்ள தற்போதைய மாதாந்த புலமைப்பரிசில் தவணைப் பணத் தொகை நிலவுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளுக்கு ஒப்பீட்டளவில் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) அவ்வாறாயின், தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் புலமைப் பரிசில் தவணைப் பணம் அதிகரிக்கப்படாத காலப்பகுதி ஆகிய விடயங்களைக் கவனத்தில் கொண்டு குறித்த கொடுப்பனவை குறைந்தபட்சம் ரூபா ஐயாயிரம் (ரூ.5000/=) வரை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்துவாரா  என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-18

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-18

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks