பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-05-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0002/2010: Chena Cultivation at Ranminitenna

0002 / ’10

 

கெளரவ சஜித் பிரேமதாச,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(ஆ)    (i)      அம்மாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளர் பிரிவினுள் கிரிந்த யால தொடக்கம் றண்மினிதென்ன கிராமம் வரை 7000 ஏக்கர் நிலப்பரப்பில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 4500 தொடக்கம் 6000 இடைப்பட்ட விவசாயக் குடும்பங்கள் சேனைப் பயிர்ச்செய்கை மூலம் தமது வாழ்வாதாரத்தைப் பேணிவருகின்றார்களென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) நிர்க்கதியான அந்த சேனை விவசாயிகளின் விவசாய நிலங்களை அவர்களுக்கு இழக்கச் செய்கின்ற திட்டமொன்று உள்ளதா,

(ii) அவ்வாறாயின் அந்த முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா?

என்பதை அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) (i) இந்த விவசாய நிலங்கள் எப்போதும் காட்டு யானைகளினால் பாதிப்புக்குள்ளாக்கப் படுகின்றனவா,

(ii) அவ்வாறாயின் இந்தப் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை,

(iii) மேற்படி நிலங்களுக்கான நீர், மின்சாரம், பாதைகள் ஆகிய அடிப்படை வசதிகளை வழங்கி விவசாயக் காணிகளாக அவற்றை அபிவிருத்தி செய்து, அவற்றின் உரிமையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா?

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-05-18

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks