04

E   |   සි   |  

 திகதி: 2013-08-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3576/2013: தபால் சேவை வலையமைப்புக் கருத்திட்டம்: விபரம்

3576/ ’13

கௌரவ சுஜீவ சேனசிங்க,—  தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தபால் சேவையை வலைப்பின்னலொன்றாக்குவதற்காக ரூபா 30 கோடிக்கு மேற்பட்ட பணத்தொகையொன்று செலவிடப்பட்டுள்ளதென்பதையும்;

           (ii)    மேற்படி கருத்திட்டத்திற்காக பெறப்பட்ட கனணிகளும் துணைப்பாகங்களும் 05 வருடகாலமாக எவ்வித பயன்பாட்டிற்கும் எடுக்கப்படவில்லை என்பதையும்;

(iii) கொள்வனவு செய்யப்பட்ட கனணிகளின் உத்தரவாதக் காலம் தற்போது முடிவடைந்துள்ளதென்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டம் கையளிக்கப்பட்டுள்ள நபர் ஊழல் குற்றச்சாட்டொன்றில் குற்றவாளியாகியுள்ளாரென்பதையும்;

(v) மேற்படி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாதெனக் கூறி தபால் மாஅதிபர் பொறுப்புக்கூறுவதிலிருந்து விலகியுள்ளாரென்பதையும்

அவர் அறிவாரா?

  (ஆ) மேற்படி கருத்திட்டதிற்காக ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 30 கோடிக்கு மேலதிகமாக மேலும் ரூபா 35 கோடியை தபால் திணைக்களம் கோரியதற்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

 (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-06

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-11

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ ஜீவன் குமாரணதுங்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks