பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2107/2026
கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உடவளவை தேசிய பூங்காவிற்கும் லுணுகம்வெஹெர தேசிய பூங்காவிற்கும் இடையில் உள்ள யானை வழித்தடம், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதி யாது;
(ii) மேற்படி வழித்தடத்தின் இருமருங்கிலும் பாதுகாப்பு மின்சார வேலி அமைக்கப்பட்ட திகதி யாது;
(iii) மேற்படி மின்சார வேலியை அமைப்பதன் முக்கிய நோக்கம் யாது;
(iv) யானை பாதுகாப்பு வேலியை அமைப்பதற்குச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை எவ்வளவு;
(v) 2018 ஆம் ஆண்டில் யானை பாதுகாப்பு வேலி இருக்கும் போதே அதிகாலை வேளையில் கிராமத்துக்குள் புகுந்த ஒரு யானை பாடசாலை மாணவரொருவரைக் கொன்றுள்ளதை அறிவாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) யானை வழித்தடத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் பலஹருவ கிராமம் உள்ளடங்கும் பகுதியில் பிரதான மின்சார வேலி தற்போது செயலிழந்துள்ளதென்பதை அறிவாரா?
(ii) மேற்படி மின்சார வேலியை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதா;
(iii) ஆமெனில், அந்த முடிவு எடுக்கப்பட்ட திகதி மற்றும் அதன் நோக்கம் யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-05
கேட்டவர்
கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks