E   |   සි   |  

 திகதி: 2026-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2102/2026: பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டம்: விபரம்

2102/2026

கௌரவ சுஜீவ திசாநாயக்க,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரைக்  கேட்பதற்கு,— 

(அ)     (i)     பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் யாதென்பதையும்;

           (ii)    மேற்படி கட்டளைச் சட்டம் தற்போதும் அமுலிலுள்ளதா என்பதையும்;

           (iii)    மேற்படி கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் முக்கிய குறிக்கோள் யாதென்பதையும்;

(iv) இலங்கையில் மேற்படி கட்டளைச் சட்டத்தின் கீழ்வருகின்ற சமய நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) சமய நிறுவனங்கள் வசமுள்ள காணிகளிலிருந்து வரி அறவிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள சட்டம் யாதென்பதையும்;

(ii) மேற்படி சட்டத்தின் மூலம் வரி அறவிடற்பாலதான வரம்பு, சதவீத அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) சமய நிறுவனமொன்றின் வசமுள்ள ஒரு காணியை குத்தகைக்கு விடக்கூடிய உயர்ந்தபட்ச காலப்பகுதி யாதென்பதையும்;

(iv) அவ்வாறான ஓர் ஒப்புதல் மீறப்படும் பட்சத்தில், அநீதிக்கு உள்ளாகும் திறத்தவரொருவருக்கு நீதியை நிலைநாட்டிக்கொள்ளக்கூடிய விதம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-04

கேட்டவர்

கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-04

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks