E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1304/ 2025 - கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1304/2025

      கௌரவ (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ‘i-Road’ கருத்திட்டத்தின் கீழ், மாத்தறை மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய வீதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நீளம் கிலோமீற்றர்களில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) அந்த வீதிகளில், தற்போது அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள வீதிகளின் எண்ணிக்கை மற்றும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள வீதிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் போக்குவரத்து மிகச் சிரமமாகியுள்ள வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை நிறைவுசெய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?


       

கேட்கப்பட்ட திகதி

2025-11-10

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-11-10

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks