01

E   |   සි   |  

 திகதி: 2025-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1284/2025: உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள்: சட்ட நிலைமை

1284/2025
கௌரவ சட்டத்தரணி சரத் குமார,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட முடியுமா;
(ii) அதற்காக அரசியல் உரித்துடைய அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுகிறது என்பதையும் அரசியல் உரித்தற்ற அரச உத்தியோகத்தர்கள் பதவி விலக வேண்டும் என்பதையும் அறிவாரா;
(iii) உள்ளூராட்சி மன்றமொன்றில் நகரபிதா/தவிசாளர் பதவிக்கு அரச உத்தியோகத்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால், அப்பதவியில் இருக்கும் காலப்பகுதியினுள் அவர் தேர்தலுக்கு முன்பு ஈடுபட்ட அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியுமா;
(iv) அதற்குரியதான சட்ட நிலைமை யாது;
(v) 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, மடுல்ல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தமது தவிசாளர் பதவியை வகித்த காலப் பகுதியினுள், தவிசாளர் பதவிக்குரிய சம்பளத்தையும், அரச உத்தியோகத்திற்கான சம்பளத்தையும் என இரண்டையும் பெற்றுக்கொண்டார்கள் என்பதை அறிவாரா;
(vi) அதற்கான சட்ட உரித்து அவர்களுக்கு உள்ளதா;
(vii) அவர்கள் இரண்டு சம்பளங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனில், அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(viii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சரத் குமார, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-10-09

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks