E   |   සි   |  

 திகதி: 2025-05-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0790/2025: தெதுறு ஓயாவுக்கு அண்டியதாக இடிந்துவிழும் நிலையிலுள்ள ஓய்வு விடுதிகள்: புனரமைப்பு

790/2025
கௌரவ சுஜீவ திஸாநாயக்க,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) யாபஹுவ இராசதானியில், தெதுறு ஓயாவிற்கு அண்டியதாக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ளதை அறிவாரா;
(ii) அந்த காணிகளில் நிர்மாணிக்கப்பட்டு, இன்றளவில் இடிந்து விழும் நிலையிலுள்ள ஓய்வு விடுதிகளை துரிதமாக புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;
(iii) அப்பிரதேசம் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கான இளைப்பாறும் இடமாக பயன்படுத்தப்படுவதோடு அங்கு எவ்வித துப்புரவேற்பாடு வசதிகளும் இல்லாத காரணத்தினால் குறித்த வசதிகளை ஏற்படுத்துவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா;
(iv) ரிதீபெந்தி எல்ல அணைக்கட்டு பிரதேசத்தையும் மேற்படி ஓய்வு விடுதிகளையும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்துவதற்கு நீர்ப்பாசன திணைக்களத்திடம் திட்டமேதும் உள்ளதா;
(v) மேற்படி பிரதேசத்தில் சில முறைசாரா கட்டுமானங்கள் காணப்படுவதால் நீர்ப்பாசன நீர் வழிந்தோடாமை காரணமாக விவசாய நடவடிக்கைளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதோடு, மேற்படி இடையூறுகளை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-20

கேட்டவர்

கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-20

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks