பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-06-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0599/2026: மருத்துவர்கள்: ஊதியம் மற்றும் புலம்பெயர்தல்

599/2025
கௌரவ (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) பொது மருத்துவரொருவருக்கும் விசேட மருத்துவ நிபுணரொருவருக்கும் அரசாங்கத்தினால் செலுத்தப்படும் மாதாந்த ஊதியம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) அரசாங்க சேவையில் இருக்கும் போது லீவு பெற்று அல்லது சேவையிலிருந்து விலகி இன்றளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள பொது மருத்துவர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) 2020 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தாக்கம் செலுத்திய காரணிகள் யாவை என்பதையும்;
(v) இன்றளவில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vi) மருத்துவர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(vii) மருத்துவர்கள் நாட்டை விட்டுச் செல்வதை குறைப்பதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-06-26

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ஹங்சக விஜேமுணி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks