logo

E   |   සි   |  

 திகதி: 2025-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0582/2025: தென் மாகாண சபையின் கலாசார அமைச்சு: 20152019 வரை நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள்

582/2025
கௌரவ லால் பிரேமநாத்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றதா என்பதையும்;
(ii) மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படும் முறை குறித்து பாராளுமன்றம் அறிந்துகொள்ளும் வழிமுறை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த தென் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி யாதென்பதையும்;
(ii) மேற்படி நிதியிலிருந்து தென் மாகாண கலாசார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகை யாதென்பதையும்;
(iii) தென் மாகாண கலாசார அமைச்சினால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iv) அது தொடர்பாக விசாரணையொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(v) மேற்படி கட்டிடங்களை பொது மக்களின் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-23

கேட்டவர்

கௌரவ லால் பிரேமநாத், பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-21

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks