01

E   |   සි   |  

 திகதி: 2025-04-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0574/2025: அரச காணி உரிமையாளர்களுக்கு அறுதி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம்: விபரம்

574/2025
கௌரவ சானக மாதுகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரச காணிகளுக்கான உறுதிகளை கொண்டிருப்பவர்களுக்கு அறுதி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(ii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் இன்றளவில் வழங்கப்பட்டுள்ள அறுதி உறுதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்​;
(iii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் அறுதி உறுதிகளை பெற்றுக்கொள்வதற்கு அரச காணிகளுக்கான உறுதிகளை வைத்திருப்போர் தமது உறுதிகளை சம்பந்தப்பட்ட பிரதே​​ச செயலகங்களுக்கு ஒப்படைத்துள்ளமையை அறிவாரா என்பதையும்;
(iv) பிரதே​ச செயலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள உறுதிகளை மீள வழங்கும் நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-08

கேட்டவர்

கௌரவ சானக மாதுகொட, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-04-08

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks