01

E   |   සි   |  

 திகதி: 2025-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0444/2025: இலங்கை கனிய மணல் கம்பனிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட தற்காலிக தொழிலாளர்கள்: சம்பளம் வழங்காமை

444/2025

கௌரவ சானக மாதுகொட,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புல்மோட்டை, இலங்கை கனிய மணல் கம்பனிக்கு 2024.07.01 ஆந் திகதி முதல் தற்காலிக அடிப்படையில் தொழிலாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை எவ்வித வேதனமோ, கொடுப்பனவோ செலுத்தப்படவில்லையென்பதை அறிவாரா;

(ii) மேற்படி ஊழியர்களுக்கு வேதனம்/கொடுப்பனவு செலுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை;

(iii) இவ்வூழியர்களுக்கு வேதனத்தை செலுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iv) இவர்களது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-08

கேட்டவர்

கௌரவ சானக மாதுகொட, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-08

பதில் அளித்தார்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks