04

E   |   සි   |  

 திகதி: 2025-03-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0380/2025: மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி மற்றும் ஒரு நாள், பன்னாள் மீன்பிடிப் படகுகள்: விபரம்

380/2025

கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(iii) இலங்கையிலுள்ள பன்னாள் மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை, இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பன்னாள் மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை மற்றும் இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத பன்னாள் கலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) இலங்கையிலுள்ள ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை, இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) கடற்றொழிலை மேம்படுத்துவதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-01

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-01

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks