01

E   |   සි   |  

 திகதி: 2025-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0255/2025: காலி, வலஹன்துவ தோட்ட காணியில் திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள்: தற்போதைய நிலைமை

255/2024

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி மாவட்டத்தில் நுகதூவ, "வலஹன்தூவ வத்தை" காணியை துண்டாக்கி பல்வேறு கருத்திட்டங்களுக்காக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டங்களின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டங்களுக்காக இதுவரையில் செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) ஒவ்வொரு கருத்திட்டத்திற்குமான தேவை மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் நன்மைகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(v) அதன்படி, அத்தியாவசியமான கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

(vi) அவற்றுள் சில கருத்திட்டங்கள் இன்றளவில் இடைநடுவில் நிறுத்தப் பட்டிருப்பின், அவற்றை மீள ஆரம்பிக்க முடியுமா என்பதையும்;

(vii) இன்றேல், மேற்படி கருத்திட்டங்களால் ஏற்க நேரிடும் நட்டம் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-05

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-15

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks