04

E   |   සි   |  

 திகதி: 2025-01-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0182/2025: 2019 முதல் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்கள்: மின் பிறப்பாக்கம்

182/2024

கௌரவ ரவீந்திர பண்டார,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திலிருந்தும் பிறப்பாக்கம் செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படும் மின்சார கொள்ளளவு மற்றும் தற்போது பிறப்பாக்கம் செய்யப்படும் மின்சார கொள்ளளவு தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட மின் உற்பத்தி நிலையங்களில் புதுப்பிக்கத்தக்க சக்தி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) மேற்படி மின் உற்பத்தி நிலையங்கள் யாவை என்பதையும்;

(v) மேற்படி ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திலிருந்தும் பிறப்பாக்கம் செய்யப்படும் மின்சார கொள்ளளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தேசிய மின் கட்டமைப்பை விருத்திசெய்வதற்கு வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவையென்பதையும்;

(ii) புதுப்பிக்கத்தக்க சக்தியை விருத்திசெய்வதற்கான திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-09

கேட்டவர்

கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-09

பதில் அளித்தார்

கௌரவ குமார ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks