04

E   |   සි   |  

 திகதி: 2025-02-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0179/2025: இலங்கை மின்சார சபை: கடன்கள் மற்றும் ஊழியர் கொடுப்பனவுகள்

179/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை மின்சார சபை கூட்டிணைக்கப்பட்ட திகதியையும்;

(ii) இலங்கை மின்சார சபைக்காக அரசாங்கம் முதலீடு செய்​த மொத்த மூலதனத்தையும்;

(iii) இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்ட குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்களின் மொத்தத் தொகையை வெவ்வேறாகவும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கை மின்சார சபையில் பணிபுரிகின்ற நிரந்தர மற்றும் அமய ஊழியர்களின் எண்ணிக்கையை தனித்தனியாகவும்;

(ii) 2024 சனவரி முதல் டிசெம்பர் வரை பணியாட்டொகுதியினருக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட சம்பளம், மேலதிக நேர ஊதியம், தொழில் படிகள், மிகையூதியம், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் ஊதியங்கள் ஆகியவற்றுக்காக மொத்த​ம் செலவான தொகையை தனித்தனியாகவும்;

(iii) இலங்கை மின்சார சபை அதன் பணியாட்டொகுதியினருக்கான உழைக்கும் போது செலுத்தும் வரியை (PAYE) செலுத்துகிறதா என்பதையும்;

(iv) இன்றேல், உழைக்கும் போது செலுத்தும் வரியை அது செலுத்தாது நிறுத்திய திகதியையும்;

அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-19

பதில் அளித்தார்

கௌரவ குமார ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks