02

E   |   සි   |  

 திகதி: 2025-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0128/2025: கண்டி, மாபேரியதென்ன உத்தேச உள்நாட்டு விமான நிலையம்: காணிச் சுவீகரிப்பு

128/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி, மெததும்பர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாபேரியதென்னயில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள / சுவீகரிக்கப்பட்டுள்ள காணியின் அளவு எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி காணிகளிலுள்ள அரசாங்க பெருந்தோட்டக் காணிகளின் அளவும் தனியாருக்குரிய பெருந்தோட்டக் காணிகளின் அளவும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட காணிகளிலுள்ள தனியார் வீடுகள், கைத்தொழிற்சாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் பொதுச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்திற்காகக் காணிகளைக் சுவீகரிக்கும்போது தனிநபர்கள் தங்களது வீடுகளை இழப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு வீடுகளை இழக்கும் ஒவ்வொரு தனிநபரினதும் பெயர் மற்றும் முகவரி வெவ்வேறாக யாதென்பதையும்;

(v) வீடுகளை இழக்கும் நபர்களை மீள்குடியேற்றும் செயன்முறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள கொள்கைசார் முடிவுகள் மற்றும் மாற்று யோசனைகள் வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-07

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks