04

E   |   සි   |  

 திகதி: 2025-02-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0098/2025: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 2023.10.22 முதல் 2024.10.21 வரையான பெற்றோலிய விற்பனை: இலாபம் அல்லது நட்டம்

98/2024

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2023 அக்டோபர் 22 தொடக்கம் 2024 அக்டோபர் 21 வரையில் பெற்றோலிய விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி காலப்பகுதியினுள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஈட்டிய இலாபம்/ அடைந்த நட்டம் எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்படி காலப்பகுதியினுள் எரிபொருள் விற்பனையில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், ஒரு லீற்றரிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு வகை எரிபொருளின் அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

(v) மோசடி செய்யப்பட்ட மொத்த பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(vi) ஒரு லீற்றர் எரிபொருளிலிருந்து மோசடி செய்யப்பட்ட தொகையைக் குறைத்ததன் பின்னர் கிடைக்க வேண்டிய நிவாரணம் தற்பொழுது மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-18

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-18

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks