04

E   |   සි   |  

 திகதி: 2025-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0075/2025: வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு: குடிநீர் வசதிகள்

75/2024
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனையறுப்பான், பன்சேனை வாதக்கல்மடு, பாவற்கொடிசேனை, உன்னிச்சை, நெடியமடு ஆகிய பிரதேசங்களுக்கு இற்றைவரை குடிநீர் வசதிகள் வழங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) உன்னிச்சையிலிருந்து வேறு பல பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்ட போதிலும் இற்றைவரை உன்னிச்சை பிரதேச மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி பிரதேசங்களுக்கு குடிநீர் வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், இப்பிரதேசங்களுக்கு குடிநீர் வசதிகள் வழங்கப்படவுள்ள காலப்பகுதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-20

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-20

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks