04

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0064/2024: வர்த்தமானியில் வெளியிடப்படாத கால்நடை மேய்ச்சல் தரைகள்: மட்டக்களப்பு மாவட்டம்

64/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை - தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு, கோறளைப்பற்று - தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மண்முனை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை ஆகிய பிரதேசங்களில் சுமார் ஆறு இலட்சம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் உள்ளதென்பதையும்;

(ii) ஆயினும், மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என இதுவரை வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என வர்த்தமானியில் வெளியிடப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

(ii) அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks