03

E   |   සි   |  

 திகதி: 2025-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0006/2025: மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைப்பு தொடர்பான விசாரணைகள்: முன்னேற்றம்

6/2024

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பதிவாகிய திகதி யாது என்பதையும்;

(ii) மேற்படி சம்பவத்திற்காக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தை விசாரணை செய்த பாதுகாப்பு அலுவலர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(ii) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது அந்தப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அழுத்தம் பிரயோகித்த அப்போதைய ஆளுநர்கள் மற்றும் அரசாங்கத்தில் பலம்வாய்ந்த நபர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-24

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-25

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks