01

E   |   සි   |  

 திகதி: 2013-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

2451/2013: நில்வள கங்கைக் கருத்திட்டம் : மூன்றாம் கட்டம்

2451/ ’12

கௌரவ புத்திக பதிரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     நில்வள கங்கை கருத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தற்போது பாதுகாப்பற்ற பிரதேசத்தில் காணப்படும் பெருமளவிலான காணிகளை அபிவிருத்தி செய்ய முடியுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி கட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;

(v) அதற்கான நிதியை வழங்கும் நாடுகள் அல்லது நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(vi) அவ்வாறாயின், மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-26

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-02-19

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks