E   |   සි   |  

 திகதி: 2023-10-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

3667/2023: ரஜவெல்ல மற்றும் ரஜவெல்ல - வடக்கு குடியிருப்புக்காணிகள்: உறுதி வழங்கல்

3667/2023

கௌரவ (சட்டத்தரணி) ரஊப் ஹகீம்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2004.12.27 ஆம் திகதி இலங்கை மகாவலி அதிகார சபையினால் விக்டோரியா வதிவிட முகாமைத்துவ அலுவலகத்தில் நடத்தப்பட்ட காணிக் கச்சேரியில் காணி பெறுநர்களாக தெரிவு செய்யப்பட்ட 44 பேருக்கு ரஜவெல்ல மற்றும் ரஜவெல்ல – வடக்கு ஆகிய குடியிருப்புகளில் 10 பேர்ச்சஸ் மற்றும் 15 பேர்ச்சஸ் அளவிலான காணித் துண்டுகள் வழங்கப்பட்டன என்பதையும்;

(ii) 10 பேர்ச்சஸ் மற்றும் 15 பேர்ச்சஸ் அளவிலான காணித் துண்டுகளுக்கு முறையே மூன்று இலட்சம் ரூபா மற்றும் நான்கு இலட்சம் ரூபா வீதம் மதிப்பீட்டுப் பெறுமதிகளைச் செலுத்துவதற்கு பணிக்கப்பட்டது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) உரிய காணி பெறுநர்களிடமிருந்து மேற்குறிப்பிட்ட மதிப்பீட்டுப் பெறுமதிகளை அறவிட்டுக் கொண்டு, அக்காணிகளுக்கு துரிதமாக உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-17

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2023-11-21

பதில் அளித்தார்

கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks