01

E   |   සි   |  

 திகதி: 2023-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

3174/2023: Purchase of paddy by government from 2017 to 2021

3174/2023

கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) ஒவ்வொரு மாவட்டத்திற்குமாக ஒதுக்கப்பட்ட தொகை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

(iii) ஒவ்வொரு மாவட்டத்திற்குமென ஒதுக்கப்பட்ட தொகையானது மொத்தத் தொகையின் சதவீதமாக எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்குறித்த காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2022 ஆம் ஆண்டில் நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) 2022 ஆம் ஆண்டில் இன்றளவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு யாதென்பதையும்;

(iii) அதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks