பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1615/2023
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "பரிசர மாவத்த கருத்திட்டத்தின்" கீழ், தெரிவுசெய்யப்பட்ட மாகாணங்களில் சுற்றாடல் பாதைகளை அமைப்பதற்காக சுற்றாடல் அமைச்சு 2018 ஆம் ஆண்டில் ரூ. 5 மில்லியன் நிதியை அப்போதைய அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு விடுவித்துள்ளபோதிலும், குறிப்பிட்ட நிதியில் ரூ.20,000/- மாத்திரம் செலவிடப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;
(ii) 2021 ஆம் ஆண்டில் 100 பரிசர மாவத்தகளை அமைப்பதற்கு திட்டமிடப் பட்டிருந்தபோதிலும், சுற்றாடல் பாதை தொடர்பிலான பொருள்கோடல் மற்றும் அளவுகோல்கள் அறிமுகம் செய்யப்படாமைக்கான காரணங்கள் யாவை;
(iii) சுற்றாடல் அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான பணித் திட்டத்தில் பரிசர மாவத்த கருத்திட்டம் உள்வாங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
(iv) பரிசர மாவத்த கருத்திட்டத்தின் உத்தேச நோக்கங்களை அடையாமல் குறிப்பிட்ட கருத்திட்டத்தை செயற்படுத்துவதை நிறுத்தியமைக்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-23
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-05-23
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks