04

E   |   සි   |  

 திகதி: 2012-02-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2066/2012: Peter's Farm - Compensation

2066/ ’11

 

கெளரவ அ. விநாயகமூர்த்தி,—  காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      திரு. பஸ்தியாம்பிள்ளை ஜோசப் பீற்றருக்குச் சொந்தமான பீற்றர்ஸ் பண்ணை தச்சன்குளம், வவுனியாவில் உள்ள பத்து ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணி (துண்டு இல. 797, காட்டப்பட்ட பட இலக்கம்: 7 SP 4739)  வவுனியா விமான நிலைய விஸ்தரிப்புக்காக 1986 இல் சுவீகரிக்கப்பட்டது என்பதையும்;

(ii) 1986 இல் சுவீகரிக்கப்பட்ட காணிக்கான நட்டஈடு இன்னும் செலுத்தப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) திரு.பஸ்தியாம்பிள்ளை காலம் சென்றுவிட்டதால் மேற்படி நட்டஈட்டை அவரின் மனைவிக்கும் மகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-02-10

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks