பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1895/ ’11
கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்குரியதாயிருந்த யாய காமினீ கனிஷ்ட வித்தியாலயம் மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றனவென்பதையும்;
(ii) இந்த வித்தியாலயத்திற்குச் சொந்தமாகவிருந்த சில கட்டிடங்கள் தற்போது அழிவுற்று வருகின்றனவென்பதையும்;
(iii) இந்த வித்தியாலயத்திற்குச் சொந்தமாக சுமார் ஏழு ஏக்கர் நிலப்பரப்பு உள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) யாய காமினீ கனிஷ்ட வித்தியாலயத்திற்குச் சொந்தமாகவுள்ள கட்டிடங்கள் மற்றும் நிலப்பரப்பு என்பவற்றை அழிவுற இடமளிப்பது பெரும் தவறாகும் என்பதையும்;
(ii) மேற்படி வித்தியாலயத்திற்குச் சொந்தமான வளங்களைப் பயன்படுத்தி கைத்தொழிற்சாலையொன்றை ஆரம்பித்து பிரதேசவாழ் மக்களின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமென்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) (i) ஆமெனில், மேற்படி பாடசாலையின் வளங்களை மேலே முன்மொழியப்பட்டவாறு பயன்படுத்துவதற்கு திட்டமிடுவாரா என்பதையும்;
(ii) இன்றேல், பயனுள்ள வேறு நடவடிக்கைக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த நடவடிக்கை யாதென்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2013-12-12
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks