பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
344/2020
கௌரவ மயந்த திசாநாயக்க,— பெருந்தோட்ட அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேயிலை சக்தி நிதியத்தில் ஆரம்பம் தொடக்கம் இதுவரையில் உள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) இந்நிதியத்தின் மூலமாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நன்மைகள் யாவை என்பதையும்;
(iii) தேயிலை சக்தி நிதியத்தின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை அங்கத்துவம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) இந்நிதியத்திற்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதித்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தேயிலை சக்தி நிதியத்தின் மூலமாக தேயிலைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
(iv) அதற்கென செலவிடப்படுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்?
(v) தொழிற்சாலைகளுக்கென முதலீடு செய்யப்பட்ட பணத்தொகையினால் ஏதேனும் இலாபம் கிடைக்கின்றதா என்பதையும்;
(vi) ஆமெனில், மேற்படி இலாபம் எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-25
கேட்டவர்
கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-20
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks