02

E   |   සි   |  

 திகதி: 2021-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0269/2021: உயர் தர மாணவர்களுக்கு டெப் கணினி வழங்கும் வேலைத்திட்டம்: விபரம்

269/2020

கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு டெப் கணினி (Tab) வழங்கும் வேலைத்திட்டத்திற்கென நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட வரவு செலவுத் திட்டம் யாது;

(ii) மேற்படி வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதித்தொகை எவ்வளவு;

(iii) மேற்படி வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளனவா;

(iv) ஆமெனில், கேள்விப்பத்திரங்களை முன்வைத்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் யாவை;

(v) மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் யாது;

(vi) கேள்விப்பத்திர கோரலின்போது முன்வைக்கப்பட்டுள்ள விபரக் குறிப்பீடுகள் யாவை;

(vii) தற்போது குறிப்பிட்ட டெப் கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனவா;

(viii) இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், உயர் தர வகுப்புகளில் கல்வி கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் டெப் கணினிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-03-09

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks