E   |   සි   |  

 திகதி: 2020-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0262/2020: பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள்: பௌத்த தர்மத்தின் பிரயோகரீதியான போதனை

262/2020

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பௌத்த தர்மம் நடைமுறை சாத்தியமுடையதொரு தர்மம் என்பதையும்;

(ii) அது பரீட்சைகளை இலக்குவைத்ததொரு விடயமாக ஏற்கனவே பாடசாலை களிலும் அறநெறி பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுகின்றதென்பதையும்;

(iii) ஆயினும், மேற்படி முறைமைகள் ஊடாக பெளத்த கோட்பாடுகளின் வாயிலாக வாழ்கையின் பால் உள்ளீர்த்துக்கொள்ளக்கூடிய ஒழுக்கம், பணிவு போன்ற உயரிய மானிடப் பண்புகள் போதியளவிற்கு சமூக நீரோட்டத்திற்குள்ளாவதில்லை என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) பௌத்த கோட்பாட்டின் நடைமுறை பயன்பாட்டினை போதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்நடவடிக்கை எவ்வகையில் மேற்கொள்ளப்படும் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-10

பதில் அளித்தார்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks