01

E   |   සි   |  

 திகதி: 2021-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0175/2021: ஹேவாகம் கோரளை ப.நோ.கூ. சங்க கிராமிய வங்கிகள்: வைப்புக்கள் மீளளிப்பு

175/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) அவிசாவளை, கிழக்கு ஹேவாகம் கோரளையின் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் 24 கிராமிய வங்கிகளில் வைப்புச் செய்துள்ள சுமார் 115,000 வைப்பீட்டாளர்களுக்குரிய 95 கோடி ரூபாயிலான வைப்புப் பணம் மேற்படி வைப்பீட்டாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் மீள வழங்கப்படவில்லை என்பதனை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வைப்பீட்டுப் பணத்தை உரிய வைப்பீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

(ii) மேற்படி வைப்புப் பணத்தை உரிய வைப்பீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு;

என்பதை அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-09

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-03-09

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks