01

E   |   සි   |  

 திகதி: 2020-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0158/2020: Pump houses to reduce flood damages in Kolonnawa Divisional Secretariat area

158/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)​ கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதான வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலைக் குறைப்பதற்காக ஐந்து நீர் இறைக்கும் பம்பியறைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) குறித்த ஐந்து பம்பியறைகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தொகையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அளவானது ஒவ்வொரு பம்பியறையின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;

(iii) இக்கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஐந்து பம்பியறைகளில் தற்போது முழுமையாக பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பம்பியறைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) பணிகள் பூர்த்தி செய்யப்படாதுள்ள ஒவ்வொரு பம்பியறையினதும் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ள திகதிகள் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-24

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-24

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks