பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-12-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0022/2020: நெருக்கடிக்குள்ளான நிதிக் கம்பனிகள்: விபரம்

22/2020

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2020.08.31 ஆம் திகதியளவில் இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதிக் கம்பனிகளின் எண்ணிக்கை யாது;

(ii) அவற்றின் பெயர்கள் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் யாவர்;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் 2020.08.31 ஆம் திகதி வரையில் நிதி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து நிதிக் கம்பனிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;

(ii) மேற்படி ஒவ்வொரு நிதிக் கம்பனியிலும் வைப்புக்களைப் பேணி வந்துள்ள வைப்பாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(iii) மேற்படி நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-08

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-20

பதில் அளித்தார்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks