04

E   |   සි   |  

 திகதி: 2020-11-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0019/2020: சீனாவுக்குத் திருத்துவதற்காக அனுப்பப்பட்ட ரேடார் ரிசீவர் மற்றும் அன்டெனா ஸ்கேனர்: விபரம்

19/2020 கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) இலங்கை விமானப்படையானது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரேடார் ரிசீவரொன்றையும் அன்டெனா ஸ்கேனரொன்றையும் திருத்துவதற்காக சீனாவுக்கு அனுப்பியுள்ளது என்பதையும்; (ii) மேற்படி பொருட்கள் காணாமல் போயுள்ளன என்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) (i) மேற்படி பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பொறுப்பேற்றிருந்த கம்பனி யாது; (ii) மேற்படி கம்பனியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் யாவர்; (iii) மேற்படி கம்பனியானது தற்போதும் இலங்கையில் ஏதேனுமோர் அரச நிறுவனத்துக்கு சேவை வழங்குகின்றதா; (iv) மேற்படி பொருட்கள் காணாமற் போனமையால் ஏற்பட்டுள்ள நட்டம் யாது; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-20

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-20

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks