பார்க்க

04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0076/2020: Reinstating approval given to filling 10 perches of paddy lands each for building houses

76/2020

கௌரவ ஹேஷா விதானகே,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மேட்டுக் காணிகளில்லாத ஆட்களுக்கு தமது வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்பி வீடொன்றை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்குதல் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்தென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) தற்போது மேட்டுக் காணிகளில்லாத ஆட்களுக்கு தமது வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்பி வீடொன்றை அமைத்துக்கொள்ள வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு இழக்கச் செய்யப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) ஆகையால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் காணியில்லாத பெரும் தொகையான மக்கள் நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகியுள்ளனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்புவதற்காக இன்றளவில் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி ஆட்களுக்கு மிகத் துரிதமாக மேற்படி10 பர்சஸ் வயல் காணியை நிரப்பிக்கொள்ள வாய்ப்பளிப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-24

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks